அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Saturday, September 8, 2007

மாற்றான் பெயர்

நான் தீவிபத்தில் மாட்டிக்கொண்டேன் - அன்று உனக்கோ காய்ச்சல்.

நான் மூச்சி விட முடியாமல் துடித்தேன் - அன்று உனக்கோ மூக்கடைப்பு .

நான் வலியில் துடித்துபோனேன் - அன்று உனக்கோ சிராய்ப்பு .

நான் நடுக்கடலில் தத்தலித்தேன் - அன்று உனக்கோ பரிட்சை.

நான் கோவிலுக்கு சென்றேன் - அன்று உனக்கோ பிறந்த நாள்.

நான் என் இதயம் துடிப்பதை வெறுத்தேன் - அன்று உன் கண்ணில் கண்ணீர்.

இன்று என் விழியில் ரத்தம் , நெஞ்சில் தாங்கா வலி
சிரம் நடுங்க , உறங்கா விழி கலங்க , தனிமை போராட்டம்
நான் உன் திருமண அழைப்பிதழில் மாற்றான் பெயர் கண்ட போது.

அனுஷாதாசன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home