அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Saturday, September 8, 2007

காத்திருப்பேன்

காத்திருப்பேன் நான், உன் வருகைக்காக காத்திருப்பேன்
காலங்கள் ஓட , கடும் மழை வீழ ,
சூடும் சூரியன் சுட்டெரிக்க,என் வியர்வை வழிந்தோட ,
முதுமை என்னை முத்தமிட,வானம் நிறம் மாற மாற
நான் காத்திருப்பேன் உன்வருகைக்காக காத்திருப்பேன் -
என்னை மண்ணில்புதைத்தபோதும் , என் காலம் முடிந்த போதும் -
உன் வருகைக்காக நான் காத்திருப்பேன்

இப்படிக்கு
பயணியர் நிழற்க்குடை.

அனுஷாதாசன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home