அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Saturday, September 8, 2007

சொல்!

பனித்துளிகளே நீ வாழ புற்கள் இருக்கும் போது
நீயேன் பூவின் மேல் பதுங்கி கொண்டாய் - முகப்பருக்கலாக.

சூரிய ஒளி கதிர்கலெ நீ படர பல பாலைவனம் உள்ளப்போதும்
நீயேன் ஒரு கண்ணில் குடிபுகுந்தாய் - என்மீது விழும் பார்வைகளாக.

மதி மயக்கும் மாலை நேர காற்றே நீ வீச பூச்சோலைகள் காத்திருக்க
நீயேன் என் மீது குளிர நினைக்கிறாய் - ஒரு மூச்சிக்காற்று வழியாக.

மெய்சிலிர்க்கும் மழை சாரல்களே நீ ஊர மாலை நேரம் தவமிருக்க
நீயேன் என் மேனி மேலே சீண்டி விளையாடுகிறாய்.

இத்தனை வரம் எனக்கு வாய்த்தும் நீ மட்டும்
ஏனடி என் காதல் ஏற்க மறுக்கிறாய் ??????? சொல்!

அனுஷாதாசன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home