அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Monday, April 27, 2009

பெண் சிசுக்கொலை

தாய்:
ஏழரை மாதம் ஆனதே என் கண்ணே காலால் உதைக்க முயன்றாயே, அத்தனையும் நான் சுமப்பேன் ஆணாக பிறந்துவிடு. பெண்ணாக நீ பிறந்தால் கல்லிப்பால் காத்திருக்கு,
சிசு:
ஆணெம்றும் பெணென்றும் நான் அறியேன், அறிந்ததெல்லாம் உன் கருவறை வெளிச்சம்தானம்மா, சொல்லடி என் தாயே ஆண் / பெண் என்றால் என்னவென்று.
தாய்:
சொல்லுகிறேன் என் குழந்தாய், அது நீ வாங்கி வரும் முதல் வரமாகும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, இதில் நீ வாழ உன் உடலில் பதிக்கப்பட்ட அடையாளச் சின்னம்தான் என் உயிரே.
சிசு:
சொல்லம்மா எனக்கு நீ ஆணாகவா பிறந்தாய், ஏனம்மா என்னை கொலை செய்வாய் நான் பெண்ணாக பிறந்துவிட்டால்.
தாய்:
உன்னை வளர்த்து எடுத்து செலவு செய்தாலும் சென்றிடுவாய் நீ புகுந்த வீட்டுக்கு, சீர் செய்தும் நகை செய்தும் உன்னால் எனக்கு யதொரு பயணும் இன்றி வாழ்ந்திடுவேன் என் இறுதி காலத்தில். என் சவத்தை இடுகை இடவும் அனுமதிகாது இவ்வுலகம், பின் பெண்ணாக ஏன் உன்னை பெற்றெடுக்க வேண்டும் சொல்வாயா என் குழந்தாய்.
சிசு:
நான்மட்டும் கருவறையின் இருட்டில் முடங்கி இருப்பதாக எண்ணி இருந்தேன், தாயே நீயோ பாவம் கண்களை இறுக்க மூடிக்கொண்டு இருட்டில் வாழ்கிறேன் என்கிறாயே. என்னை பெற்றெடுத்தால் பயன் இல்லை எங்கிறாய், எவ்வளவு பணம் வேண்டுமோ வளர்ந்தவுடன் நான் தருவேன் என்னை உயிரோடு விட்டுவிடு என் தாயே.
தாய்:
பொல்லாத உன் தந்தை அவனிடம் எவ்வாறு சொல்வேனடி, சொல்லாமல் உன் பிறப்பை எவ்வாறு நான் மறைப்பேன். முன்பே தெரிந்திருந்தால் உன்னை கருவிலேயே அழித்திருப்பேன். காலம் கடந்த பின்னே இன்று நான் என்ன செய்வேன்.
சிசு:
தாய் பாசம் அதுகூட எனக்கு வேண்டாம், என்னை அரசு தொட்டிலில் சேர்த்துவிடு. அங்காவது நான் இருந்து என் பிறவிப்பயன் அடைந்துவிடுவேன்.
தாய்:
அரசாங்க தொட்டிலிலே உன்னை தாலாட்ட யார் இருக்கா பெண்ணாக பிறந்ததினால் அங்கும் உன்னை அலட்சியம் செய்திடுவார். வெள்ளைத்துணி உடுத்தியவர் உன்னை பட்டினியில் போட்டிடுவார். பேராசை கொண்ட மிருகங்கள் அது உன்னை தெருவில் கிடத்திடுமே. இந்த இன்னலை தடுத்திடவே, கண்ணே நீ கண்ணுறங்கு.
சிசு:
கண்ணை கொஞ்சம் திறந்து பாரம்மா உலகம் விரிஞ்சி கிடக்கு, என்னை இங்கே வாழவிடு.
தாய்:
வலியால துடிக்கிறேன் என் சிசுவே, நீ ஆணாக பிறந்துவிடு. பெண்ணாக பிறந்துவிட்டால் உனக்கு கல்லிப்பால் காத்திருக்கு.
சிசு:
ஆணாக பிறந்துவிட்டேன் என் தாயே, தாலாட்டாமல் நீயேன் இறந்துபோனாய். கல்லிப்பாலும் எனக்கு இல்லை, உன் தாய் பாலும் எனக்கு இல்லை, அரசாங்க தொட்டில் போல தெருவோரம் கிடக்குறேனே. அம்மாவ முழுங்கிடேன்னு அப்பன் என்னை தொட மறுக்க. அனாதை ஆகிப்போனேன் என்னையும் கொன்னுடுங்க. பெண்ணாக நான் பொறந்திருந்தா தாயே நீயாவது வாழ்ந்திருப்ப. என்ன வரம் வாங்கிவந்தேன், இதுக்கு பெண் ஜென்மம் சாமியில்ல!!

அன்புடன்
அனுஷாதாசன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home