அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Wednesday, January 16, 2008

ஒரு வரம் தா என்னவளே!!

உன் சந்தோஷத்தில் கை கோத்து திரியும் கைகளாக நான் இல்லாவிடிலும்
உன் கண்ணீர் துடைக்கும் ஒரு விரலாகும் வரம் தா என்னவளே!!


உன் ஆனந்தத்தின் சிலிர்ப்பில் நீ சாய்ந்துகொள்ளும் தோழ்களாக நான் இல்லாவிடிலும்
உன் மௌனத்தை தாங்கும் இரும்பு மதில்களின் வலிமை தா என்னவளே!!


உன் கண்களை கண்டு உன்னை வசியம் செய்யும் கண்களாய் நான் இல்லவிடிலும்
உன் முகம் காணாமல் தினம் உறங்கும் பழக்கம் தா என்னவளே!!


உன் கால்கள் செல்லும் பூப்பாதையாய் நான் இல்லவிடிலும்,
உன் பாதம் காக்கும் செருப்பினாய் மாறும் திறன் தா என்னவளே!!



அன்புடன்
அனுஷாதாசன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home