அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Friday, November 30, 2007

திருமண விருந்து அருமை!!!

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் மூடனாக இருந்ததில்லை.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் முடமாகி இருந்ததில்லை.

எனக்கு எப்படி புரியவைப்பதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் குழம்பி இருந்ததில்லை.

எனக்கு எப்படி அழுவதென்று தெரியவில்லை
இப்படி நான் கல்நெஞ்சனாக இருந்ததில்லை.

எனக்கு எப்படி வேண்டுவதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் நாத்தீகனாக இருந்ததில்லை.

எனக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை
இப்படி நான் குருடனாக இருந்ததில்லை.

என்னவென்று தெரியவில்லை புலம்புகிறேன்
இனி நீ எனக்கு இல்லை

திருமணவாழ்த்துக்கள், விருந்து அருமை!


அன்புடன்

அனுஷாதாசன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home