என்னை கவர்ந்த சில கிறுக்கல்கள்
என் இதயம் நீ துடிக்கும்போது யாரும் உன்னை கவனிக்க மாட்டார்கள் நின்றுவிட்டால் மட்டும் பலரும் துடிப்பார்கள். இன்று அவளை நீங்கியதால் துடியாய் துடிக்கிறாய் அவளோ கவனிக்காமல் செல்கிறாள். நின்றுவிடேன் வலிக்கிறது!
என் வழிப்பயணமோ முன்னோக்கி , என் நினைவுகளோ பின்னோக்கி அவள் என்னை விட்டு பிரிகையில்! இனிதான் என் வலிப்பயணங்கள்!
சிலந்தி வலை பிண்ணிகொண்டிருக்கிறது ஒட்டடை குச்சியில் , இந்திய அரசியல்!
வெளிச்சம் போட்டு தெடியது மின்னல் , கிடைக்கவில்லை என் நிலவு !
அவளுக்காக நீரூற்றியது இந்த தோட்டக்காரன், வியர்த்திருக்கிறது பூச்செடிகளுக்கு, பூக்கள் பறித்தது அவளை பறித்த அவன்!
அன்புடன்
அனுஷாதாசன்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home