அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Monday, April 27, 2009

என்னை கவர்ந்த சில கிறுக்கல்கள்

என் இதயம் நீ துடிக்கும்போது யாரும் உன்னை கவனிக்க மாட்டார்கள் நின்றுவிட்டால் மட்டும் பலரும் துடிப்பார்கள். இன்று அவளை நீங்கியதால் துடியாய் துடிக்கிறாய் அவளோ கவனிக்காமல் செல்கிறாள். நின்றுவிடேன் வலிக்கிறது!

என் வழிப்பயணமோ முன்னோக்கி , என் நினைவுகளோ பின்னோக்கி அவள் என்னை விட்டு பிரிகையில்! இனிதான் என் வலிப்பயணங்கள்!


சிலந்தி வலை பிண்ணிகொண்டிருக்கிறது ஒட்டடை குச்சியில் , இந்திய அரசியல்!

வெளிச்சம் போட்டு தெடியது மின்னல் , கிடைக்கவில்லை என் நிலவு !

அவளுக்காக நீரூற்றியது இந்த தோட்டக்காரன், வியர்த்திருக்கிறது பூச்செடிகளுக்கு, பூக்கள் பறித்தது அவளை பறித்த அவன்!

அன்புடன்

அனுஷாதாசன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home