அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Monday, April 27, 2009

அழுகை மீறிய சோகம், நீ சிரிப்பு மீறிய சந்தோஷம்

துவட்டப்படாத அவள் கூந்தல் , மேகத்தில் இருக்கும் மழைத்துளி
மையிடப்பட்ட அவள் கண்கள், கார்மேகம் சூழ்ந்த நிலவு
இருந்தும் ஏன் என் பூமியில் மழையில்லை.
அழுகை மீறிய சோகம், நீ சிரிப்பு மீறிய சந்தோஷம்
மரணத்தை மீறிய சவம், நீ ஆசை மீறிய தவம்
பாதையை மீறிய பயணம், நீ கற்பணை மீறிய புதுமை
சொற்களை மீறிய கவிதை, நீ சிகரம் மீறிய சிந்தனை
வேதம் மீறிய காலம், நீ என் வாழ்வை மீறிய போதும் !

அன்புடன்
அனுஷாதாசன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home