அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Monday, September 1, 2008

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

பூக்களின் அழகு, பனித்துழியின் ஈரம்

பாலின் வெண்மை , குழந்தையின் சிரிப்பு

மழலையின் உளறல் , மாலை வெயில்

மஞ்சள் நிலவு , மதுவில் போதை

பெண்ணின் வடிவம் , காதலியின் கோபம்

பெண்மையின் வெட்கம் , குயிலின் குரல்

மயிலின் தோகை, இரவில் தனிமை

காலை நடைப்பபயணம், கோடை மழை

சாரல் நடுக்கம், குளிரில் தேநீர்

தவழும் குழந்தையின் தத்தை நடை தாவும் புள்ளி மான், பயணத்தில் ஓய்வு கட்டிய மனைவி , புதுக்கவிதை

இவை எல்லாம் அழகு என்பார் சிலர் - பாவம் அவர்களுக்கு தெரியாது இத்தனை அழகும் சேர்ந்து நீ இன்று பிறந்திருப்பது -

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்

அனுஷாதாசன்