என்னை பற்றி குட்டி கதை சொல்லவா
அழகிய காலை நேரம் அடர்ந்த காடு என்னை சுற்றி , ஒருவரும் இல்லாத தனிமை இதுவரை நான் கண்டிடாதா அமைதி.
தூரத்தில் ஒரு குருவி குடும்பத்தில் காலை உரையாடல் - தாய் குருவி தன் குட்டி குருவியை எழுப்பி, இரை தேட சொல்லும் சத்தம் - என் காதில் தெளிவாக விழுகிறது. குட்டி குருவி தாயிடம் கொஞ்சி சிறுது தூங்குகிறது, தாய் குருவி சுறுசுறுப்பின் அவசியத்தை குட்டி குருவிக்கு சொல்ல குட்டி குருவியும் இரை தேட புறப்படுகிறது.
என் தாய் என்னை எழுப்ப செய்யும் அர்ச்சனை கேட்க முடியவில்லை, அடுப்பில் பால் குக்கர் எழுப்பும் விசில் சத்தம் என் காதுகளை காயம் செய்ய,
திறந்த ஜன்னல் வழியே உடைந்த சாக்கடையின் குமட்டும் துர்நாற்றம்.மின் தடையினால் அரை முழுக்க உஸ்ணம் தாங்காமல் என்மேல் வியர்வை துர்நாற்றம்.
உலகம் போற்றும் மறை தமிழனாம் நான் முழுக்கை ஊடுப்பில் பெருமையாக வியர்வை வழிந்தோட நிறுவன வாகனத்திற்காக நிற்கிறேன். அய்யோ கைபேசி? அது இல்லை என்றால் இன்று எப்படி! திரும்பி ஓடு வீட்டை நோக்கி எடுத்துக்கொள் மறந்தேனே நான் கைப்பேசியில் மின் நிரப்ப, சரி நிறுவனம் அதற்கும் ஏற்பாடு செய்திருக்கும், மூச்சிரைக்க ஓடு நிறுவன வாகனம் ஏற. வாகனத்திற்குள் யாரிடமும் முகம் கொடுத்து பேசாதே , அதில் எவன் வேண்டுமென்றாலும் உனக்கு கிடைக்கும் எழும்பிற்கு போட்டியாக வந்துவிடுவான்.
ஒரு நாள் திரும்ப மேல் கண்ட கனவு நிச்சியம் வரும் என்று மனசுக்குள்ள ஒரு ஓரமா தோணுது .அட ச்ச நேரம் இரவு (அதிகாலை) ரெண்டு மணி கால நக்.......... நேரம் வந்தாச்சி ரெண்டு ரொட்டி துண்டு - ஐயா இத வச்சி இன்னும் மூணு மணி நேரம் கைபேசி பில்ல கட்டலாம், இன்னும் பத்து பெண்ணொட கடலை போடலாம். மரத்தமிழன் நான் கண்டிப்பாக வெளிநாடு சென்று என் இந்த திறமையை உலகிற்கு பாறைசாற்றுவேன்.
ஐயயையீயோ கனவு கண்டுகிட்டே ரெண்டு ரொட்டி துண்ட விட்டுதேனே , நேரம் மூணு மணி கால நக்.... மறந்துட்டேனே போச்சி நாளைக்கும் யாரையாவது கை காட்டி தப்பிக்க வேண்டியதுதான் , இல்லானா எப்படி வெளிநாடு போறது பிச்சை எடுக்கரது , சரி இப்ப போய் ஓசி டீ குடிச்சிட்டூ வீட்டுக்கு போவோம்.
மீதி கனவ அடுத்த வாரம் தூங்கும்போது தொடாருவோம். இல்லைன்னா நாளைக்கு எப்படி நிர்வாக பேருந்துல ஓசியில வர்றது.
காலந்காத்தால ஏழு மணிக்கே வந்து நீக்கும் சனியன்.
அன்புடன்
அனுஷாதாசன்.
