அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Friday, September 21, 2007

என்னை பற்றி குட்டி கதை சொல்லவா

உனக்கு குட்டி கதை சொல்லவா!

அழகிய காலை நேரம் அடர்ந்த காடு என்னை சுற்றி , ஒருவரும் இல்லாத தனிமை இதுவரை நான் கண்டிடாதா அமைதி.

தூரத்தில் ஒரு குருவி குடும்பத்தில் காலை உரையாடல் - தாய் குருவி தன் குட்டி குருவியை எழுப்பி, இரை தேட சொல்லும் சத்தம் - என் காதில் தெளிவாக விழுகிறது. குட்டி குருவி தாயிடம் கொஞ்சி சிறுது தூங்குகிறது, தாய் குருவி சுறுசுறுப்பின் அவசியத்தை குட்டி குருவிக்கு சொல்ல குட்டி குருவியும் இரை தேட புறப்படுகிறது.
அந்த அழகிய கூட்டின் அருகே ஒரு குயில் குரு இல்லாமல் சாதகம் செய்கிற சத்தமும் கேட்கிறது. மூங்கில்களும், வானுயர்ந்த மரங்களும், பச்சை புல்வெளியும், காலை காற்றுடன் நீராடி மகிழ்கின்ற தருணம் என் மேனியேல்லாம் சிலிர்த்து போகும் சிறு குளிர் நடுக்கம்.
என் மூச்சின் உஸ்னததை என் உள்ளங்கைகள் தேடி போக கால்களோ அந்த அழகிய நீரோடையை நோக்கி நடந்து செல்ல. என்னுள் எத்தனை ஆனந்தம், நீரோடையை நெருங்க நெருங்க வயிற்றுக்குள் ஒரு இனம் புரியாத கிரக்கம். நெருப்பு சுட்டுவிடுமோ என்ற பயம் போல , தெளிங்க நீரோடை நீர் என்னை சிலிர்க்க செய்யுமோ என்ற பயம்.
அத்தனை மெதுவாக நீரோடை தண்ணீரை வருடி பார்க்கும் என் நுனி விரல்கள் - கொடுத்து வைத்வை நீதான் என்று என் மற்ற உறுப்புக்கள் பொறாமையில் மெய் சிலிர்க்க, தூறல் போடும் தெளிந்த வானம்.
தூக்க கலக்கத்தில் சூரியன் சோம்பலில் எட்டிப்பார்க்க் , தோன்றும் இரண்டு வானவில், ஒன்று நீல வானில் மற்றொன்று என்னுள் வானில். கண்கள் இரண்டையும் அகல திறந்து அந்த அற்புத சூழலில் வானம் பார்க்கசடசடவென தூரல் என் கண்ணில் - விழித்து பார்த்தேன் என் இல்லம்.


என் தாய் என்னை எழுப்ப செய்யும் அர்ச்சனை கேட்க முடியவில்லை, அடுப்பில் பால் குக்கர் எழுப்பும் விசில் சத்தம் என் காதுகளை காயம் செய்ய,
திறந்த ஜன்னல் வழியே உடைந்த சாக்கடையின் குமட்டும் துர்நாற்றம்.மின் தடையினால் அரை முழுக்க உஸ்ணம் தாங்காமல் என்மேல் வியர்வை துர்நாற்றம்.
நேற்று பெய்த மழையினால் வீட்டில் தண்ணீர் தேக்கம், சிறிய துணியைக்கொண்டு தந்தை அதை பிழிந்து வெளிதிறும் காட்சி. கூரை ஓட்டை வழியே சுள்ளென்று சூரியன் என்னை வெறுபெற்ற , திங்கட்கிழமை அலுவலகம் என்னை அழைபதை காண்கிறேன் என் கைப்பேசியில் பத்துக்கும் மேற்பட்ட செய்தி , என் மேலாளரிடம் இருந்து.
பதினொரு மணிக்கு அடிமை சந்திப்பு (க்லைன்த் மீட்டிங்) உடனே வரவும். காரணம் தவமிருந்து நான் ஆனா கணினி பொறியாழன் வேலை. வெறுப்புடன் இரண்டு குவளை தண்ணீரில் காக்கை குளியல், வீட்டு உணவு வேண்டாம் என்று தாயிடம் அறைகூவல் காரணம் மதியம் வெள்ளையன் பணத்தில் மதிய பிச்சை ( டீம் அவுட்டிங் ).

உலகம் போற்றும் மறை தமிழனாம் நான் முழுக்கை ஊடுப்பில் பெருமையாக வியர்வை வழிந்தோட நிறுவன வாகனத்திற்காக நிற்கிறேன். அய்யோ கைபேசி? அது இல்லை என்றால் இன்று எப்படி! திரும்பி ஓடு வீட்டை நோக்கி எடுத்துக்கொள் மறந்தேனே நான் கைப்பேசியில் மின் நிரப்ப, சரி நிறுவனம் அதற்கும் ஏற்பாடு செய்திருக்கும், மூச்சிரைக்க ஓடு நிறுவன வாகனம் ஏற. வாகனத்திற்குள் யாரிடமும் முகம் கொடுத்து பேசாதே , அதில் எவன் வேண்டுமென்றாலும் உனக்கு கிடைக்கும் எழும்பிற்கு போட்டியாக வந்துவிடுவான்.
அமைதியாக கைப்பேசியை எடுத்து உன்னை மதிக்காத பெண்ணிடம் எதை வேண்டுமென்றாலும் பேசு. நிறுவன சிறை வந்துவிட்டது இந்த சிறையில் அனைவரும் கைதிகள் காவலர்கள் வேறு நாட்டில் !. தொழில்நுட்பம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
காலை பதினொரு மணி நேரம் வந்து விட்டது தொலைபேசியில் காவலர் காலில் விழ ! வழக்கம் போல் என் சக ஊழிய நண்பணை கைகாட்டி தப்பித்து கொண்டேன் ( பெறுமூச்சி). எப்படி நேரம் போனாதென்றே தெரியவில்லை, எந்த வேலையும் நான் செய்ததாக நினைவும் இல்லை , கைப்பேசியில் எண்களை பார்த்து இலவசமாக நண்பர்களிடம் ஊர் கதை பேசியத்தை தவிர , நேரமோ இரவு பத்து மணி, வீட்டுக்கு கிளம்ப எழுகிறேன் மறுபடியும் கைபேசி, மேலாளர் கலிங்.... (அழகிய திமிருதன் இருவிழிப்புயல் என்னை தாக்குதே ஓ ஓ - ரிங் டொன்.) எடுத்தவுடன் "ஒரு முக்கியமான க்லைன்த் நெஞ்ச நடுராத்திரி ரெண்டு மணி (ஐ.எஸ்.டீ) க்கு நக்..... ( மன்னிக்கவும் அவ்வளவு காண்டு) நீ எனக்கு பதிலா நா........ போ!
இதுக்கு உனக்கு இரண்டு ரொட்டி துண்டு இலவசம் (அதிஸநல் அலவந்ஸ்)" . என் மனத்தில் அவ்வளவு சந்தோசம், இரண்டு ரொட்டி துண்டு கண்ணுல தெரியுது நிம்மதியான தூக்கம் , குடும்பத்தோட உணவு, குழந்தைக்காக கொஞ்ச நேரம் இதுவா முக்கியம், ஒண்ணு இல்ல ரெண்டு ரொட்டி துண்டு, அதுவும் இலவசம்(இழவசம்).

ஒரு நாள் திரும்ப மேல் கண்ட கனவு நிச்சியம் வரும் என்று மனசுக்குள்ள ஒரு ஓரமா தோணுது .அட ச்ச நேரம் இரவு (அதிகாலை) ரெண்டு மணி கால நக்.......... நேரம் வந்தாச்சி ரெண்டு ரொட்டி துண்டு - ஐயா இத வச்சி இன்னும் மூணு மணி நேரம் கைபேசி பில்ல கட்டலாம், இன்னும் பத்து பெண்ணொட கடலை போடலாம். மரத்தமிழன் நான் கண்டிப்பாக வெளிநாடு சென்று என் இந்த திறமையை உலகிற்கு பாறைசாற்றுவேன்.
பாண்டிய மன்னன் (தெரியாதவர்கள் சங்க வரலாறு(ஹிஸ்தரி) படிக்கவும்) நாம் புகழ் கூற இமயம் சென்று கொடி நட்டான், இளைஞர் நாம் இந்த நாட்டு மன்னர் அல்லவா ! நான் புகழை உலகெங்கும் சென்று கோடிகாக (பணம்) மாற்றான் காலில் சமர்ப்பிப்போம். யாராவது நம்மை அடையாளம் கண்டால் உடனே நாம் வீட்டு வறுமையை கை காட்டுவோம் , முடியாமல் போனால் நாம் இந்திய திரு நாட்டின் மீது பழி போட்டு வேறு நாடு சென்று தெரு நாய்கள் போல வாழ்வோம்.

ஐயயையீயோ கனவு கண்டுகிட்டே ரெண்டு ரொட்டி துண்ட விட்டுதேனே , நேரம் மூணு மணி கால நக்.... மறந்துட்டேனே போச்சி நாளைக்கும் யாரையாவது கை காட்டி தப்பிக்க வேண்டியதுதான் , இல்லானா எப்படி வெளிநாடு போறது பிச்சை எடுக்கரது , சரி இப்ப போய் ஓசி டீ குடிச்சிட்டூ வீட்டுக்கு போவோம்.

மீதி கனவ அடுத்த வாரம் தூங்கும்போது தொடாருவோம். இல்லைன்னா நாளைக்கு எப்படி நிர்வாக பேருந்துல ஓசியில வர்றது.
காலந்காத்தால ஏழு மணிக்கே வந்து நீக்கும் சனியன்.

அன்புடன்
அனுஷாதாசன்.

வெற்றி வாகை

எனக்கு வாழ்க்கையில் வெற்றி வாகை சூட ஆசை
கண்களில் வெறி கொண்டு , கண்டேன் எண்ணில் உறங்க விழிகள் ரெண்டு.
அஞ்சாதா நடைப்பபயணம் , முட்கள் கொண்ட கடும் பாதை
எத்தனை எத்தனை தடை , அதை தகர்த்தெரியும் இந்த தனி மனித படை.
அஞ்சியதில்லை எப்பொழுதும் முன்னே தோன்றியதெல்லாம் வெற்றியின் சின்னம். கலங்கியதில்லை எப்பொழுதும்
துரோகம் கண்டு என் இதயம். நொடிக்கு ஒரு முறை துடிக்கும் பொழுதும்
சொல்லும் ஜெயம் என்னும் தாரக மந்திரம்.
உழைத்து உழைத்து தாகம் தோன்றும் தமிழ் ஊற்று மட்டும் என் தாகம் தீர்க்கும்.
எத்தனை காயம் என்னுள் கொண்டும் தோன்றாமல் போன என் மன இறுக்கம்.

இத்தனை இருந்தும் என்ன பயன் வழியில் நான் கொண்ட ஓய்வில்
தூக்கம் கொண்டதால் அழகிய சிறு கனவு தோன்றும் .
அத்தனை அழகிய கனவில் மூழ்கிடாமல் என் இதயம் சொல்லும்
முன்னே செல்ல லட்சிய பாதை இருக்க, தேவை இல்லை இந்த பருவ பயணம்.


எத்தனையோ அழகிய கனவுகள் தவிர்த்து லட்சியம் மட்டும் குடியிருக்கும் -
என் இதயத்தில் நீ எப்படி நுழைந்தாய் ? -என்று நினைவுகள் வியக்கும்.
எங்கே சென்றது என் லட்சிய வேட்கை என்ற குழப்பம் என்ணில்.
எத்தனை நடுக்கம் இதனை சொல்ல ,
பயத்தில் என் உதடுகள் - உன் பெயரை சொல்ல.
காதல் இல்லை இது என்பதை எனக்கு நான் எப்படி சொல்ல,
உன்னை தேடி தேடி கனவுலகில் என் நாட்கள் செல்ல.
பெண்மை இல்லாமல் இவ்வுலகை நான் முதலில் வெல்ல
உன்னிடம் நான் அடிமையானேன் நான் இனி என்ன சொல்ல.

எனக்கு வாழ்க்கையில் வெற்றி வாகை சூட ஆசை கண்களில் வெறி கொண்டு , கண்டேன் எண்ணில் உறங்க விழிகள் ரெண்டு.
அஞ்சாதா நடைப்பபயணம் , முட்கள் கொண்ட கடும் பாதை
எத்தனை எத்தனை தடை , அதை தகர்த்தெரியும் இந்த தனி மனித படை.
அஞ்சியதில்லை எப்பொழுதும் முன்னே தோன்றியதெல்லாம் வெற்றியின் சின்னம். கலங்கியதில்லை எப்பொழுதும்
துரோகம் கண்டு என் இதயம். நொடிக்கு ஒரு முறை துடிக்கும் பொழுதும்
சொல்லும் ஜெயம் என்னும் தாரக மந்திரம். உழைத்து உழைத்து தாகம் தோன்றும் தமிழ் ஊற்று மட்டும் என் தாகம் தீர்க்கும்.
எத்தனை காயம் என்னுள் கொண்டும் தோன்றாமல் போன என் மன இறுக்கம்.

இன்று இது கனவாகி போனது - கனவுகள் மெய்யாக இதயம் துடிக்குது.
லட்சிய பயணம் கொண்டோரே பெண்ணின் மேல் காதல் வேண்டாம்.
கொண்டால் !
வெற்றியிலும் தோல்வி காண்பாய் தோல்வியிலும் தோல்வி காண்பாய்.
பெண்கள் மீது குற்றம் இல்லை அவர்கள் அப்பாவிகள் , நீ வெற்றி பெற்றால் பெண்கள்தான் காரணம் ,
தோல்வி கொண்டால் நீ மட்டுமே காரணம்.

எத்தனை பெரிய லட்சியம் எனக்கு - என்னையும் புலம்ப வைத்தவளே !
இப்போதாவது ஒரு முறை கூறு நீ என்னை காதலிக்கவில்லை என்று.
இம்முறையும் மௌனம் சாதித்தால் நான் சென்றிடுவேன் - திரும்பி
நான் என் லட்சிய பயணத்தை நோக்கி !

காதல் செய்வதாக நீ சொன்னால் காணிக்கையாக என் வெற்றிக்கு பின்னால் நீ!
எது வேண்டும் என்னிடம் சொல்லு

அன்புடன்
அனுஷாதாசன்

Thursday, September 20, 2007

இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்

இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்
உன் சிரிப்பினை காண எத்தனை நாள் தவம் இருந்தேன் ,
உன் கொஞ்சும் பார்வை என் மீது பட எத்தனை முறை சிறகடித்தேன்.

இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்
உன் ரத்தம் வீதியில் வழிந்து ஓடியதைக்கண்டு - அதை அணை போட்டு
தடுக்க தெரியாமல் மூடன் ஆகிபோணேன் .

முதல் முதலில் உன் முகம் அருகில் காண
எத்தனை கோவிலில் வாரம் கேட்டேன்,
இப்படியா உன் கண்கள் மூடி உன் முகம் அருகில் காண்பேன் -
இப்படியாஉன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்.

உன் உதடுகள் ஏதோ என்னிடம் சொல்ல இன்றும் தயங்குதிடி
இம்முறையும் நீ சொல்லாமல் போனால் -
உனக்கு நேர்ந்த விபத்தால் என் உயிர் போகுமடி.

நீயும் இல்லை என்று சொன்னால் - ஏன்துயர் .
சொல்லியார் மடியில் தலை சாய்ந்து அழுவேன்டி.
என் கைகள் நடுங்குதாடி, என் இதயம் பதறுத்தடி,


இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்.
இப்படி உன்னை கண்டதற்கு காணாமளே இறந்திருப்பேன்.

அன்புடன்
அனுஷாதாசன்.

Sunday, September 9, 2007

முரசு

எத்தனை கண்கள் உனக்காக கண்ணீர் சிந்தும்
எத்தனை கண்ணீர் துளிகளை உனக்காக என் கண்கள் சிந்தும்.
என் கண்ணீர் ஊற்று வற்றி - என் குருதி கொட்டும்
இருந்தும் உன் பெயரை மட்டும் என் இதழ்கள் முரசு கொட்டும்

அன்புடன்
அனுஷாதாசன்

நீதான் என்றுணர்ந்தேன்

வாசங்கள் பேசும் மொழி , வசந்தங்கள் என்றிருந்தேன்
என் சுவாசங்கள் பேசும் மொழி, நீதான் என்றுணர்ந்தேன்.
வேசங்கள் தேவை இல்லை கண்ணே !
கண்களின் பாஷையில் சொல்லிவிடு - என் பாசங்கள்நான் இழப்பேனே நம் நேசம் தொடர்ந்திடவே!

அன்புடன்
அனுஷாதாசன்

Saturday, September 8, 2007

சொல்!

பனித்துளிகளே நீ வாழ புற்கள் இருக்கும் போது
நீயேன் பூவின் மேல் பதுங்கி கொண்டாய் - முகப்பருக்கலாக.

சூரிய ஒளி கதிர்கலெ நீ படர பல பாலைவனம் உள்ளப்போதும்
நீயேன் ஒரு கண்ணில் குடிபுகுந்தாய் - என்மீது விழும் பார்வைகளாக.

மதி மயக்கும் மாலை நேர காற்றே நீ வீச பூச்சோலைகள் காத்திருக்க
நீயேன் என் மீது குளிர நினைக்கிறாய் - ஒரு மூச்சிக்காற்று வழியாக.

மெய்சிலிர்க்கும் மழை சாரல்களே நீ ஊர மாலை நேரம் தவமிருக்க
நீயேன் என் மேனி மேலே சீண்டி விளையாடுகிறாய்.

இத்தனை வரம் எனக்கு வாய்த்தும் நீ மட்டும்
ஏனடி என் காதல் ஏற்க மறுக்கிறாய் ??????? சொல்!

அனுஷாதாசன்

பொய்

பொய் கூறியதில்லை நான் உன்னிடம்,
ஏன் என்று உனக்கே தெரியும் - நான் இதுவரை உன்னிடம் பேசியதே இல்லை.
பேசினாலும் பெண்ணே பொய் கூற மாட்டேன்
அது போதும் என்று அன்றே இறந்துபோவேன்.

அனுஷாதாசன்

காத்திருப்பேன்

காத்திருப்பேன் நான், உன் வருகைக்காக காத்திருப்பேன்
காலங்கள் ஓட , கடும் மழை வீழ ,
சூடும் சூரியன் சுட்டெரிக்க,என் வியர்வை வழிந்தோட ,
முதுமை என்னை முத்தமிட,வானம் நிறம் மாற மாற
நான் காத்திருப்பேன் உன்வருகைக்காக காத்திருப்பேன் -
என்னை மண்ணில்புதைத்தபோதும் , என் காலம் முடிந்த போதும் -
உன் வருகைக்காக நான் காத்திருப்பேன்

இப்படிக்கு
பயணியர் நிழற்க்குடை.

அனுஷாதாசன்

பெண் - ஒரு மதம்

உன் மதம் என்ன , பெண்மையா?
இத்தனை மதம் பிறந்து மனிதனை அழித்துத்த்து போதாதா !
இன்னும் எத்தனை உயிரை நீ குடிக்க போகிறாய்.
தேநீர் சூட்டை கூட தாங்காத உன்னால் -
எப்படி என்னுள் ரத்தகொதிப்பை ஏற்படுத்த முடியும்.
வியக்கிறேன் பெண்மையின் மதத்தில் இத்தனை வன்முறையா?மென்மையானவள் என்று நம்பிததானே
உன்னிடம் என் இதயத்தை பரிசளித்தேன்,
நீயேன் உன் மதத்திற்காக என்னை பலி கொடுத்தாய்.
உன்னிடம் நான் காதல் வரம் கூட கேட்கவில்லை
பின்பு ஏன் என் உண்மை நட்பை சூரையாடினாய்
என் அனைத்து சொந்தமும் என்னை வெறுக்க செய்தாய் ,
உண்மையில் பெண்ணே நான் கொடுத்த இதயத்தை ஒரு முறை திறந்து பார், அதில் காதல் இருக்காது ஒரு நண்பனின் உண்மை கண்ணியம் தெரியும்.
நீ பெண் மதத்தில் பிறந்ததால்தானே இந்த நட்பு தொடர மறுக்கிறாய்.
உன் மதத்தை நான் வணங்குகிறேன்.

அனுஷாதாசன்

மாற்றான் பெயர்

நான் தீவிபத்தில் மாட்டிக்கொண்டேன் - அன்று உனக்கோ காய்ச்சல்.

நான் மூச்சி விட முடியாமல் துடித்தேன் - அன்று உனக்கோ மூக்கடைப்பு .

நான் வலியில் துடித்துபோனேன் - அன்று உனக்கோ சிராய்ப்பு .

நான் நடுக்கடலில் தத்தலித்தேன் - அன்று உனக்கோ பரிட்சை.

நான் கோவிலுக்கு சென்றேன் - அன்று உனக்கோ பிறந்த நாள்.

நான் என் இதயம் துடிப்பதை வெறுத்தேன் - அன்று உன் கண்ணில் கண்ணீர்.

இன்று என் விழியில் ரத்தம் , நெஞ்சில் தாங்கா வலி
சிரம் நடுங்க , உறங்கா விழி கலங்க , தனிமை போராட்டம்
நான் உன் திருமண அழைப்பிதழில் மாற்றான் பெயர் கண்ட போது.

அனுஷாதாசன்

உன்னை பார்த்து

உன்னை பார்த்து

90 நாட்கள் ,
2160 மணி நேரம் ,
129600 நிமிடம்,
7776000 நொடி ஆயிற்று

ஏன் என்று தெரியவில்லை இத்தனை தோல்விக்கு பின்னும்
இந்த நொடி உன்னை காண்பேன் என்று தேடும் என் கண்கள் .


அனுஷாதாசன்.

உன்னை பற்றி

என்னவளே என் காதல் சொல்ல சில வார்த்தைகள்
இதோ இங்கு சேகரித்து வைத்திருக்கிறேன் .

உன் அழகை சொல்ல சில வார்த்தைகள் ,
வானம், நிலா, மயில், வெட்கம், அருவி, மழை, மாலை, பூ,புல்வெளி.

உன் குணத்தை சொல்ல சில வார்த்தைகள்
பூ வாசம், கோவில், பக்தி, கருணை, பாசம், பண்பு, பொறுமை.

உன் வாழ்வை சொல்ல சில வார்த்தைகள்
பிரம்பன், கம்பன், புள்ளி மான், இதயம், கருவரை,

இன்னும் உன்னை பற்றி சொல்ல தமிழில் மூன்று லட்சம் வார்த்தைகள்
ஆனால் என் காதலின் ஆழம் சொல்ல ஒரு வார்த்தை மட்டும்தான் உண்டு
அது உன் பெயர்தான் ,

அனுஷாதாசன்.

Friday, September 7, 2007

இறைவா இறைவா அவளிடம் என்னை விதைத்ததுவிடு

இறைவா இறைவா என்னை கருணையின் கருவியாக்கு,
இறைவா இறைவா என்னை பொறுமையின் இமயமாக்கு,
இறைவா இறைவா என்னை அமைதியின் சின்னமாக்கு,
இறைவா இறைவா என்னை வன்முறையின் எதிரியாக்கு,
எங்கே மனிதன் பாசம் இல்லாமல் தவிக்கிரானோ
அங்கே என் நேசம் தொடர ஆணையிடு.
எங்கே அழுகை குரல் அதிகம் கேட்கிறதோ
அங்கே என்னை தாலாட்டும் தாயாக்கு.
எங்கே இருளில் உலகம் தடுமாறுகிறதோ
அங்கே என்னை ஒளி தரும் கருவியாக்கு.
எங்கே உயிருக்கு மதிபில்லையொ
அங்கே என் கருணை படர்ந்திட வழிகாட்டு.
எங்கே போர்கள் வெடிக்கிறதோ
அங்கே என் பொறுமையை பறைசாற்று.
எங்கே என்னவள் வசிக்கின்றாலோ
அங்கு நிரந்தரமாய் என்னை காவலனாக்கு.
தாக்கம்
அன்னை தெரெஸா
அன்புடன்
அனுஷாதாசன்

அனுஷாதாசன்

அவள் கூந்தல் ஏறி உதிரும் ரோஜா மலர்களே !
நீ உன் கூர் முட்காளினால் அவள் கூந்தலை கீறிவிடாதே!!!!!!!
அவளை சேதம் செய்யாமல் நீ வந்தால்
நான் தருவேன் என் இதயத்தை நீ கிழித்து விளையாட

அன்புடன்
அனுஷாதாசன்

உன்னை கண்டேன்

ஆயுதம் பயின்று வந்தேன்
அதில் ஆண்மை இல்லை என்றேன்

விஞ்ஞானம் பயின்று வந்தேன்
அதில் விருப்பம் இல்லை என்றேன்

அறிவியல் பயின்று வந்தேன்
அதில் ஆக்கம் இல்லை என்றேன்

இசையை பயின்று வந்தேன்
அதில் இயற்கை இல்லை என்றேன்

கடவுளை பயின்று வந்தேன்
அதில் பக்தி இல்லை என்றேன்

இலக்கணம் பயின்று வந்தேன்
அதில் இயல்பு இல்லை என்றேன்

மெய்ஞ்ஞானம் பயின்று வந்தேன்
அதில் உண்மை இல்லை என்றேன்

இன்று அன்பை பயின்று வந்தேன் - என் அணுவும் ஆசையும் என்றே
தினம் உன்னை பயில நின்றேன் - என்னுள் காதல் ஊதிப்பாதை கண்டேன்.

அன்புடன்
அனுஷாதாசன்