அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Friday, November 30, 2007

இறந்துவிடடி நானும் உன்னுடன் வந்துவிடுகிறேன்

என்ன‌வ‌ளே, என் அனுவே, உன‌க்கு எப்ப‌டிய‌டி சொல்லுவேன்,


இட‌ப்ப‌க்க‌ம் துடிக்கும் இத‌ய‌த்தின் அதிர்ச்சி வ‌ல‌ப்ப‌க்க‌ம் வ‌லிக்குத‌டி,
க‌ண்க‌ளை மூடி உன்னை நினைத்தால், என் த‌லையை பாறையில்
முட்டிய‌தை போலே ஒரு ம‌ங்கிய‌ பார்வையில் என் வ‌லி ம‌ற‌ப்பேன்,
இருந்தும் ஏனோ என் தூக்க‌ம் ம‌ற‌ப்பேன்.


இற‌ப்பு என்றவுட‌ன் அனைவ‌ருக்கும் நினைவுக்கு வ‌ருவ‌து
அந்த அசையா உடல், ஒரு வேளை அந்த உடலுக்கு உணர்ச்சி மட்டும் இருந்தால், அது அந்த உடலை இய‌க்க‌ எப்ப‌டி த‌விக்கும், க‌ற்ப‌னை செய்து பார‌டி, அப்ப‌டித்தான் துடிக்கிறேன் சொல்ல‌ தெரியாம‌ல், என் காத‌லை.


நாம் முழுதும் வெறுக்கும் ஒருவ‌ன் ந‌ம்மை அனைவ‌ர் முன்னிலையில்
அவ‌ம‌தித்து, ம‌கிழ்ந்து, வாய்விட்டு சிரித்து, அத‌னை ந‌ம்மால் ஒன்றும் செய்ய முடியாம‌ல் போனால் , த‌லை சிறிது தாழ்த்தி அவ‌மான‌ம் அதை ம‌றைத்து,
அமைதியாக‌ ப‌ற்க‌ளை ம‌ட்டும் கடித்து, நிலையில்லாத‌ ம‌ன‌ம் கொண்டும் அந்த இடத்தை விட்டு செல்ல முடியாமல் துடிப்போமே,
அது போல்தானடி நீ மாற்றானை மணக்க போவது தெரிந்தும் கோழையாக உயிர்விட முடியாமல் உன் திருமண அழைப்பிதழ் கண்டு நான் துடிப்பது.

சொல்ல தெரியவில்லையடி - நான் எப்படி தமிழில் சொல்லுவேன்


இறந்துவிடடி நானும் உன்னுடன் வந்துவிடுகிறேன்,
மாற்றானோடு செல்லாதடி நான் குமுறி அழுதுவிடுவேன்.

அன்புட‌ன்
அனுஷாதாச‌ன்.

எப்ப‌டி இருந்த நான் இப்ப்டி ஆயிட்டேன்.‌

எப்படி இருந்த நான் ,

இப்படி ஆயிட்டேன்,


ச்க்ஜ்ல்;ட்ச்ஜ்ஃபிஒன் க‌ச்ஜ்ட்;ஜ்ஃபொஇ நெஹ்ஜ்ஹ்த்ல்ஹ் க்ஜொட்ஃப்ஜ் ல்க்ச்ஜொட்ஜ்ஃப் ல்க்ஜ்டிஃப்க்ஜ்க்ஜ்ட் க்ஜ்ச்டுஇநிஎஉருஇஉ ம்ன்ல்ச்ன்ஃப்லிச்ஜ்ட்ஃப்ன் ல்ஜ்சிட்ஃப்ஹெக்ஜ் ல்ச்க்ட்ஜ்ஃப்ஜ்ன் ல்க்ச்ஜ்ட்ஃப் ல்சிட்ன்ஃப்ஹ்ந் ல்க்ட்ஜொஃப் ல்ச்க்ஜ்டொஃபுஹ் ல்க்ச்ட்ஃப்பூஎக்ஜ்ச் ல்ச்க்ட்ஜ்ஃபொஜ்ட்ச்ஜ்.


இத‌ன் அர்த்த‌ம் சொல்ல‌ ம‌ட்டுமாவ‌து
உன் மெள‌ன‌ம் விட்டு வ‌ருவாயா!


அன்புட‌ன்
அனுஷாதாச‌ன்.

திருமண விருந்து அருமை!!!

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் மூடனாக இருந்ததில்லை.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் முடமாகி இருந்ததில்லை.

எனக்கு எப்படி புரியவைப்பதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் குழம்பி இருந்ததில்லை.

எனக்கு எப்படி அழுவதென்று தெரியவில்லை
இப்படி நான் கல்நெஞ்சனாக இருந்ததில்லை.

எனக்கு எப்படி வேண்டுவதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் நாத்தீகனாக இருந்ததில்லை.

எனக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை
இப்படி நான் குருடனாக இருந்ததில்லை.

என்னவென்று தெரியவில்லை புலம்புகிறேன்
இனி நீ எனக்கு இல்லை

திருமணவாழ்த்துக்கள், விருந்து அருமை!


அன்புடன்

அனுஷாதாசன்.

Thursday, November 29, 2007

சொல்ல‌டி என் ராட்ச‌ஷி கொலை செய்ய‌ எங்கே க‌ற்றுக்கொண்டாய்

சொல்ல‌டி என் ராட்ச‌ஷி கொலை செய்ய‌ எங்கே க‌ற்றுக்கொண்டாய்




என் கடித‌த்திற்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் காத‌லை கொலை செய்தாய்

என் ம‌டைமைக்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் அறிவை கொலை செய்தாய்

என் அன்பிர்க்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் அமைதியை கொலை செய்தாய்

என் அழுகைக்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் மனதை கொலை செய்தாய்


சொல்ல‌டி என் ராட்ச‌ஷியே என் உயிரை ம‌ட்டும் விட்டு ம‌ற்ற‌வை கொலை செய்ய‌ எங்கே க‌ற்றுக்கொண்டாய்?




என் உயிரை வாங்கும் என் கொலைகாரியே ஒரு முறை சொல்ல‌டி

என் நித்திரை கெடுத்த‌ ராட்ச‌ஷியே ஒரு முறை சொல்ல‌டி

என‌க்கு பித்த‌ம் கொடுத்த‌ கொடுங்கோல் ஆட்சியே ஒரு முறை சொல்ல‌டி

என்னுள் நித்த‌ம் வ‌ள‌ரும் புற்று நோயே ஒரு முறை சொல‌ல‌டி




சொல‌ல‌டி சொல்ல‌டி என் ராட்ச‌ஷியே என்னை எப்போது முழுதாய் கொலை செய்ய‌ போகிறாய், கொலைகாரியே ஒரு முரைப்பிலாவ‌து என்னை கொலை செய்ய‌டி!!!!


என் ராட்ச‌ஷியே!!!!




அன்புடன்

அனுஷாதாசன்.

Wednesday, November 28, 2007

நாட்டுப்பற்றுக்கு நாம் கேட்கும் விலை என்ன?

என் அருமை பாரதத்திருநாடே என்றுதான் உன்னிடம் ஒற்றுமை காண்பேனோ !

இந்தியா எனும் ஒரு பெயரில் எத்தனை எத்தனை வேறுபாடு, நான் பிறந்த என் தாய் நாடு இதில் ஏன் பிரிந்து கிடக்கும் இரண்டு தனி நாடு. ராஜ்ஜியம் ஆளும் வடநாடு, அதன் மானம் காக்கும் தென்நாடு. இருந்தும், சொல்லாத பனிப்போர் உண்டு நம்மோடு அதை மறந்து நட்பு கொள்வது எப்போது?


மதம் அதனிடம் நாம் கொண்ட பற்று, மானிடம் அதை மறந்திட செய்யும். ஜாதி அதன் பாசம் மதத்தையும் மீறி பல உயிர் இழப்புக்கள் செய்யும். காதல் அது நம் நாட்டின் பாரம்பரியம், நம் ஜாதிக்குள் உள்ளவரையில் நிச்ச‌யம் வெல்லும், ஜாதி கடந்த காதல் நாம் பிறந்த வீட்டின் நிம்மதி கொல்லும். அதையே மதம் தாண்டி செய்தால் போதும் ஒரு மதத்தின் பெருமை சொல்ல போர்கள் வெடிக்கும். போர்க்களம் அதில் அந்த உண்மை காதல் மட்டும் வழியின்றி தத்தளிக்கும்.


நம் வீட்டுக்குள் பட்டினி படர்ந்திருந்தால் என்ன, பக்கத்து வீட்டாரின் பட்டு கவசத்தின் கறை போதும் நம் நாள் நகர. நம் பிறந்த வீட்டின் பாசம் அதை விட நம் கணவன் வீட்டாரின் குறைகள் போதும் நாம் சண்டையிட.


ஹரித்துவார், ரிஷிகேஷ், வேளாங்கன்னி, ஜம்மா மஷ்ஜித், காசி, ராமேஷ்வரம் மற்றும் உன் தெருவோரம் கூட இருக்கும் திருத்தளம் நீ போய் பக்தி முத்தமிட, இருந்தால் என்ன அயோத்தி ஒன்று போதும் நாம் சண்டையிட!


தலித்துகள், பிராமணர்கள், வன்னியர், பிள்ளை, நாடார், தேவர், கவுண்டர், நாயிடு என்று குடும்பத்திற்கு ஒன்றென உள்ளது கோடி ஜாதிகள், அதன் ஒவ்வொரு உட்பிரிவும் நம் நாட்டின் நீங்காத வியாதிகள். மதம் எனும் போர்வையில் புற்று நோய் இருந்தால், ஜாதி எனும் பெயரில் உயிர் கொல்லிகள். போதும் போதும் எனும் போதனை இட்டோரும் கூட ஜாதி சண்டை பயிற்சி முகாமில் தேரியவர் போலும்.


எத்தனை எத்தனை சண்டைகள் இத்திருநாட்டில் இருந்தும் ஒற்றுமை காண்கிறேன் சில காலத்தில்,


கார்கில் போரில் மாய்த்த 1000 வீரர் உயிர், அப்போதுதான் தெரிந்து கொண்டேன் மொத்தம் எத்தனை மாநிலம் இந்தியாவில் உள்ளதென்று , அத்தனை உள்ளமும் ஒன்றாய் சொல்லிட கண்டேன் ஒரு நாடு தழுவிய வெற்றி நமக்கென்று.

கடல் அது கொந்தளித்து ஆயிரம் ஆயிரம் உயிர் குடித்த சுனாமிக்கு உதவி கரம் நீட்டும் போதும் நம்முடையா ஒற்றுமை புலப்படும்.


குஜ‌ராத் பூக‌ம்ப‌த்தில் 30000 உயிர் ப‌லி க‌ண்ட‌வுட‌ன், 200 கோடி க‌ண்க‌ளில் க‌ண்ணீர் காட்டாறு. அப்போதும் க‌ண்டேன் அங்கே க‌ருணையில் ஒரு ஒருமைப்பாடு.

இதை எல்லாம் சிந்திக்கும் போது ஒன்று புல‌ப்ப‌டுகிறது.
நாம் ந‌ம் ஒற்றுமை காட்டிட‌ ப‌ல‌ உயிர்க‌ளை ப‌லியிட‌ வேண்டியுள்ள‌து.

ந‌ம் நாட்டில் என்றும் அனைவ‌ரும் ஒற்றுமையாக‌ வாழ‌வேண்டும் என்றால் போர்க‌ள் இருக்க ‌வேண்டும் அல்ல‌து பூக‌ம்ப‌ம் இருக்க‌வேண்டும். குறைந்த‌து 1000 இந்திய‌ர்க‌ளாவ‌து உயிர் விட‌ வேண்டும்.


ஒரு முறை கூறுங்க‌ள் நீங்க‌ள் என்றும் நிர‌ந்த‌ர‌மாக ஒற்றுமை காட்டிட‌ எத்த‌னை உயிர்க‌ளை கேட்கிறீர்க‌ள்.அதனோடு என்னுயுரையும் சேருங்கள்!!!


அன்புட‌ன்
அனுஷாதாச‌ன்.

Thursday, November 22, 2007

உதய நாள் நல்வாழ்த்துக்கள்.

நிலா அது விழித்திருக்கும் சாமத்தில், முழுமதி தோன்றும் தருணம் இது ‍பெளர்னமி இன்று, காலை முதல் விரதம் இருந்து, சுத்தம் அதனை பறிமாறி.ஆயக்கலை அறுபத்து மூன்று அதில் கவிதை எனும் கலை எடுத்து ‍ தமிழ் எனும் பூமி அதில் கற்பனை எனும் நடவு நட்டு. அதில் புதுமை எனும் தண்ணீர் விட்டு,
ஆங்கிலம் எனும் களை எடுத்து, காத்து, காத்திருந்து; கருத்து எனும் அரிவாளால் அறுவடை செய்த கவிதை அதில் உணர்ச்சி கொண்டு நாற்றடித்து சிதறும்மணி மணியாய் சொற்மணிகள் .
அத்தனையும் பதமாய் வேகவைத்து சுக்கு திப்பிளி கிராம்பு சீரகம் சேர்த்துமனமாக சமைத்து காலை சுரியனிடம் படையளிட காத்திருக்கும் தமிழர் போல‌,

முத்தமிழ் கொண்டு நீ சமைத்த தமிழ் குருவி லேகியம் அதை உனக்கு உன் உதய (பிறந்த) நாளில் பரிசளிக்க எத்தனை இன்பம் என்னிடம்.
உதய நாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
அனுஷாதாசன்.