அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Friday, October 12, 2007

தனிமை

என் தனிமை என்னவென்று தெரியுமா?

காலையில் கண்விழிக்க என்னை எழுப்ப யாரும் இல்லை ‍ நானாக நேரம் கடந்து எழுந்து வெறுபோடு வேறுவழி இன்றி சுடு நீர் விலவ யாரும் இல்லாத்தால் அந்த குளிரில் நான் புரிவேன் குளிர்ந்த நீர் குளியல் ‍ தெரியுமா உனக்கு எத்தனை கொடுமை அது என்று.

என் துணிகள் அதனை துவைத்து வைக்கவும் யாரும் கிடையாது ‍ தனியே கசங்கிய துணிகள் அதனுள் சிறந்ததை எடுத்து உடுத்தி திரிவேன் அதனை கேட்க கூட யாரும் இல்லை.

காலையில் கண்விழித்தவுடனே தேனீர் அதனை உதடு சுட உள்ளிக்க ஆசை ஏனோ அதனை தர யாரும் எனக்கு இல்லை.

பணிக்கு செல்லும் முன் சிறிது காலை உணவு உட்கொள்லும் பேராசை ஏனோ எனக்கு பரிமார யாரும் இல்லை.

வீட்டை விட்டு வெளியே செல்லும் என்னை பத்திரமாக சென்று திரும்ப வேண்டும் என எண்ணி விடை கொடுக்க எனக்கு யாரும் இல்லை.

என் வீட்டு பூட்டு மட்டும் சொல்லும் என்னிடம் விரைவாக வா , இல்லை என்றால் என்னை உடைத்து உனக்கு துணையாக உன்னோடு வாழும் உயிரற்ற அந்த சில பொருட்களையும் திருடிவிடுவார்கள் என்று!!!!

தெருவில் நான் நடந்து வரும் போது என் தலைமுடி கலைந்திருக்கும் பல நாட்களுக்கு முன்னால் துவைத்த துணி அதிலே மெல்லிய வியர்வை வாசம் , உள்வாங்கிய சிறுத்த என் கண்கள் எதையோ தேடும், உலகில் எல்லாவற்றையும் தொலைத்ததை போன்ற என் முகம் , என் உருவம் கண்டவர் எல்லோருக்கும் சோகம் சூளும் , இருப்பினும் என் கண்ணீர் துளி துடைக்க எனக்கு யாரும் இல்லை.

வேலை அது என‌க்கு அவ‌மான‌ சோலை !!
இங்ஙும் என்னை கேட்க‌ யாரும் இல்லை, தெரிந்தே இங்கு நான் ப‌ல‌ பிழை செய்கிறேன் , யார‌வ‌து அத‌ற்காக‌ என்னிட‌ம் பேச‌ மாட்டார்க‌ளா என்று !!!!! பாவிக‌ள் என்னை எப்பொழுதும் ம‌ன்னித்து விடுவார்க‌ள். என்னை திட்ட‌ கூட‌ இங்கு யாரும் இல்லை.

மாலை க‌ட‌ற்க‌ரையோர‌ம் ந‌டைப‌ய‌ண‌ம் இங்கு என் கை கோர்த்து ந‌டை ப‌ழ‌க‌ யாரும் இல்லை , த‌னியே அந்த க‌ட‌ல் அலைக‌ள் ம‌ட்டும் கேளி செய்யும் என்னை, ம‌டி சாய்ந்து‌ அழ‌ கூட‌ என் தாய் என்னுட‌ன் இல்லை.

என் ம‌ன‌ம் விட்டு சில‌ உண்மை சொல்ல‌ என‌க்கு ந‌ண்ப‌ர்க‌ள் என்று சொல்ல‌ இங்கே ஒருவ‌ன் கூட‌ இல்லை. வெறுப்பின் விழும்பில் என் வ‌யிற்றுப்ப‌சி தெருவோர‌ம் இய‌ங்கும் அந்த சொர்க‌ம் த‌ள்ளு வ‌ண்டி சிற்றுண்டி க‌டை !! ஆஹா எத்த‌னை ஆன‌ந்த‌ம் அந்த‌ க‌டைக்கார‌ அக்கா பாச‌த்தோடு என‌க்கு ப‌ரிமாரிய புளித்து போன‌ தோசை ரெண்டுட‌ன் அவ‌ள் பேசிய‌ இர‌ண்டு வார்த்தை "துட்ட‌ கொடுயா" !!!!
இத‌னை கூட‌ என்னிட‌ம் பேச‌ யாரும் இல்லை.
என் வீட்டு பூட்டு என‌க்காக‌ காத்திருக்கும் அத‌னை காண‌ நான் விரைந்து செல்வேன், நான் தாம‌த‌மாக‌ வ‌ந்த‌தால் அது கூட‌ என்னிட‌ம் பேசாம‌ல் நின்ற‌து.

இப்ப‌டி ஒரு வாழ்க்கை இங்கு தேவையா என்று நான் ம‌ட்டும் தின‌ம் தின‌ம் என்னிட‌ம் கேட்குக்கொள்வேன்.

தெரியுமா உன‌க்கு த‌னிமை என்றால் என்ன‌வென்று , உன்னோடு நான் வாழும் க‌ன‌வோடு இங்கு நான் வ‌ந்தேன் பெண்ணே !!!

இன்றும் உன்னோடுதான் வாழ்ந்து வ‌ருகிறேன் த‌ன்ன‌ந்த‌னியே !!!
அன்புட‌ன்.
அனுஷாதாச‌ன்

இனி போர்க‌ள் ம‌ட்டும் நிலைத்திருக்க‌ட்டும்

நதிக்கரையோரம் மெல்லிய புற்கள் படர்ந்த காலை நேரம்

நீரோடை செய்யும் போரில் சிந்தும் சாரல் துளிகள்

அந்த‌ புற்களின் மீது படிந்த ரத்ததுளிபோல் சூரிய ஓளி வந்து சுத்தம் செய்ய

காத்திருக்க, போரில் மடிந்து விழும் வீரர்கள் போல, ஓலமிட்டு கீழே

விழும் அருவிகளின் அலரல், இப்படி ஒரு போர் களத்திலும் - ஓடை

அதன் கரையோரம் தேங்கிய தண்ணீர் அத‌னோடு பூத்திருக்கம்
வண்ண வண்ண மலர்கள் !!!

நீண்டு வளர்ந்த மூங்கில் மரம் அதன் கோபம் தீர கத்திச்சண்டையிடும்

தன் கூட்டத்தோடு, யார் வானோடு விளையாடுவது என்று.

வானத்தோடு உரசிக்கொண்டு வாழும் அந்த மலைகளுக்கு இடையே

இந்த போர் நாடகம் ‍, இப்படி ஒரு போர் களம் இருக்குமேயானால்‍;

இனி இப்பூவுலகில் போர்கள் மட்டுமே நிலைத்திருக்கட்டும்..

அன்புட‌ன்
அனுஷாதாச‌ன்

Friday, October 5, 2007

கொய்யா பழம்

நிரத்தில் நீ அழகில்லை ஆனால் ஏனடி உன் மேல் எனக்கு ஆசை!
ஏன் என்று தெரியவில்லை ‍ நாக்கில் எச்சில் ஊருதடி;
உன் ருசி பட‌வேண்டும் என்றே நான் பசி கொண்டு காத்திருப்பேன்.

காய்கள் கணியாமல் உண்ண முடியாது ‍
உன்னை மட்டும்தானடி காயாகக்கூட உண்ண துடிக்குதடி என் இதயம்.
உன் மேல் மிளகாய் ‍ உப்பை தூவினால் நீ
என் நாக்கின் அடியில் நீர் ஊற்றாகிராய் ‍- உன்னை பரித்தவுடனே
கடித்து தின்றால் நீயோ என் கண்களிலே அருவியாகிராய்
ஏன் அருமை (அம்)மாங்கனிக்கு பிறகு உன்னிடம்
மட்டுமே நான் காணுகிறேன் இத்த்னை அழ‌கிய‌
ஒரு கிர‌க்க‌ம், உண்ட‌பின் க‌வ‌ளை மற‌‌ந்த‌ உற‌க்க‌ம்.

நீ கனிந்த பின்னும் எனடி என் உள்ளம் கவரும் நிரமானாய்
திர‌ண்டு வ‌ள‌ர்ந்து ஏன‌டி பிடிவாத‌ம் கொண்ட‌ சேயானாய்
ம‌ஞ்ச‌ல் நிர‌ம் போர்தி உள்ளே மெல்லிய‌ சிக‌ப்பு க‌ணிம‌ம்
அதில் எத்த‌னை விதை முததுக்க‌ளை ப‌தித்து
‍ உன்னை உண்ணுவோரைப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்தினாய்.

உண்போருக்கு நீயோ ப‌ல‌ ச‌க்தியிடுகிராய்,
இரும்பு ம‌ன‌ம் கொண்டோருக்கும் நீ இரும்பு ச‌த்து எற்றுகிறாய்
பால் ம‌ன‌ம் கொண்டோருக்கும் நீ தூய‌ பாடம் புக‌ட்டுகிறாய்.
க‌ல்நெஞ்ச‌ம் கொண்டோரும் உன்னை க‌ண்டால் நீர் க‌சிந்து நின்றார்.
ம‌ற்ற‌ ப‌ழ‌த்தை போல் இல்லைய‌டி நீ !
ஆண்டு முழுவ‌துமே நீ பூக்கிறாய் ‍ உன்னை
என் தோட்ட‌த்தில்பாதுகாக்க‌ நாளெல்லாம் காவ‌ல் கொண்டேன்.
இத்த‌னையும் உள்ள‌த‌டி நீ அன்று உண்ட‌ கொய்யா ப‌ழ‌ம் அதில்.

நீயென‌டி அந்த‌ அனிலிட‌ம் மாட்டிக்கொண்டாய் ‍
அத‌ற்கு உன் ருசி ம‌ட்டும்தான் தெரியும் உன் அருமை புரியாது.

உன் தாய் உன‌க்கு கொய்யா ப‌ழ‌ம் த‌ருகிறாள் ‍ நீ அதை தின்று
அனிலிட‌ம் மாட்டிக்கொண்டாய். வ‌ருந்துகிறேன் நான் வ‌ள‌ர்த‌ கொய்யா மாற்றான் தோட்ட‌த்து அனிலிட‌ம் அழிய‌போவ‌தை.

அன்றே அனில் மிக‌வும் மோச‌மான‌து ‍
ஒரு சிறிய‌ க‌ல்லை போட்டு அனும‌னின் சேவை
அனைத்தையும் ம‌றைத்த‌து ராம‌ணிட‌ம் இருந்து.
இந்த கலிகாலத்தில் இந்த ராமன் செய்த சேவையை
அந்த அனில் எமாற்றி பிடுஙகியது என் கொய்யா பழம் உன்னை.
இனி பாதுகாக்க நீ இல்லை , நீ வாழ்ந்து போன மரம் உண்டு
அதன் அடியில் மீண்டும் என் கொய்யா நீ பூப்பாய் என்று காத்திருப்பேன்.

பட்ட மரம் பூக்காது -‍ எனக்கு தெரியும் ,
மீண்டும் வருவாயா என் கொய்யா பழமே!

அன்புடன்
அனுஷாதாசன்.